/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரையி-லான ஆயுதங்கள் எஸ்.பி., ஆபீஸில் ஆச்சர்யப்பட வைத்த கண்-காட்சி
/
அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரையி-லான ஆயுதங்கள் எஸ்.பி., ஆபீஸில் ஆச்சர்யப்பட வைத்த கண்-காட்சி
அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரையி-லான ஆயுதங்கள் எஸ்.பி., ஆபீஸில் ஆச்சர்யப்பட வைத்த கண்-காட்சி
அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரையி-லான ஆயுதங்கள் எஸ்.பி., ஆபீஸில் ஆச்சர்யப்பட வைத்த கண்-காட்சி
ADDED : அக் 26, 2024 08:03 AM
ஈரோடு: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும், போலீஸ் துறை பயன்பாட்டில் உள்ள ஆயு-தங்கள், பாதுகாப்பு கருவிகளை கண்காட்சியாக காட்சிப்படுத்த அரசு உத்தரவிட்டது.
இதன்படி ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்த ஆயுத கண்காட்சியை,
எஸ்.பி., ஜவகர் துவக்கி வைத்து பார்வை-யிட்டார்.
கண்காட்சியில், 1950ம் ஆண்டு பயன்படுத்திய கை துப்பாக்கி, ரிவால்வர் கை துப்பாக்கி, நவீன கை துப்பாக்கிகள், ஒற்றை குழல், இரட்டை குழல் துப்பாக்கிகள், ஏ.கே.47 துப்பாக்கி, கேஸ் கன், குண்டு துளைக்காத ஆடை (புல்லட் புரூப் ஜாக்கெட்), கண்ணீர் புகை குண்டுகள், துப்பாக்கி-களில் முன்பகுதியில் பொருத்தப்படும் கத்தி, இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்-டிருந்தது.சட்டத்துக்கு புறம்பாக பதுக்கி வைத்து பறி-முதல் செய்யப்பட்ட நாட்டு துப்பாக்கிகள் என, ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் தற்போது வரை பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள், ஆயுதங்-களும் இடம் பெற்றன. மக்கள், பள்ளி மாணவ, மாணவியர்
ஆர்வத்துடன் கண்காட்சியை பார்வையிட்டனர்.
ஆயுதங்களின் செயல்பாட்டை ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். கண்காட்சியில் ஏ.டி.எஸ்.பி.,க்கள் விவேகானந்தன், வேலுமணி, டி.எஸ்.பி., சக்திவேல், ஆயுதப்படை இன்ஸ்-பெக்டர் மோகன்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இன்னும் ஆயிரம் ஆயுதங்கள் வரலாம்... போகலாம்... அகிம்சை என்னும் ஆயுதமே உலகின் நிரந்தர ஆயுதமாக என்றும் திகழும்.