/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் இ.பி.எஸ்.,சுக்கு வரவேற்பு
/
காங்கேயத்தில் இ.பி.எஸ்.,சுக்கு வரவேற்பு
ADDED : நவ 18, 2024 03:29 AM
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பரஞ்சேர்வழி கரியகாளி-யம்மன் கோவிலில் நடந்த அ.தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில், எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொது செயலா-ளருமான இபிஎஸ் நேற்று
பங்கேற்றார்.
முன்னதாக காங்கேயத்தில் அவருக்கு, கட்சியினர் உற்சாக வர-வேற்பு அளித்தனர். காங்கேயம்-சென்னிமலைரோடு, நால்ரோடு பகுதி என இரு இடங்களில் நடந்த வரவேற்பில், ஆயிரக்கணக்-கான தொண்டர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திரும-ணத்தில் மணமக்களை வாழ்த்திய பின், விருந்து சாப்பிட்டார். பிறகு, ௯:௪௫ மணிக்கு சேலத்துக்கு கிளம்பி விட்டார்.
திருமணத்தில், திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் பொள்-ளாச்சி ஜெயராமன், எம்.எல்.ஏ., வேலுமணி, முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், நகர செயலாளர் வெங்குமணிமாறன் உட்-பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.