sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை

/

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் பரவலாக மழை


ADDED : அக் 20, 2024 01:41 AM

Google News

ADDED : அக் 20, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று

அதிகாலை முதல் பரவலாக மழை

தர்மபுரி, அக். 20-

தர்மபுரி மாவட்டத்தில், கடந்த, 3 நாட்களாக ஆங்காங்கே, மழை பெய்து வந்த நிலையில், நேற்று அதிகாலை காலை முதல் மதியம் வரை தொடர்ந்து மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வட கிழக்கு பருவ மழை மற்றும் வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதில், கடந்த, 15 முதல், தர்மபுரி மாவட்டத்தில், ஆங்காங்கே, விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. இதில், தர்மபுரி மாவட்டத்தில், நேற்று காலை, 6:00 மணி நிலவரபடி தர்மபுரி, 30, பாலக்கோடு, 2, மாரண்டஹள்ளி, 6 என மாவட்டத்தில், 41 மி.மீ., மழை அளவு பதிவானது. அதை தொடர்ந்து, மிதமான சாரல் மழை மாவட்டம் முழுவதும் காலை முதல் மதியம், 12:00 மணி வரை பெய்தது. இதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தர்மபுரி நகரில் பரபரப்பாக காணப்படும் பஸ் ஸ்டாண்ட், ஆறுமுக ஆச்சாரி தெரு, அப்துல் முஜீத் தெரு, நேதாஜி பைபாஸ் சாலை உள்ளிட்ட

பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

வாகன போக்குவரத்து நிறுத்தம்

தர்மபுரி, தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி வழியாக, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு, மைசூருக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ், கார், லாரி, கண்டெய்னர் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று அதிகாலை, 4:00 மணி முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்யத்துவங்கியது. இதனால், அதிகாலையில் கனரக வாகனங்கள் லாரிகள் நிறுத்துமிடம், பெட்ரோல் பங்க் மற்றும் திறந்த வெளி சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தினர். இதனால், தர்மபுரியில் வாகன போக்கு வரத்து கனிசமாக குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

நீரோடைகளில் வெள்ளப் பெருக்கு

தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, பையர்நாயக்கன்பட்டி, தீர்த்தமலை, வேப்பம்பட்டி, கீரைப்பட்டி, வாச்சாத்தி, அச்சல்வாடி, பேதாதம்பட்டி, சித்தேரி, நவலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், நேற்று அதிகாலை முதல், பகல், 12:30 மணி வரை, விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்தது. கனமழையால் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரம்பியது. மேலும், நரிப்பள்ளி கல்லாறு, கோட்டப்பட்டி அடுத்த செலம்பை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதே போல், சிட்லிங், கலசப்பாடி, வாச்சாத்தி, கூக்கடப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள காட்டாறு மற்றும் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது. அரூரில், நான்குரோடு, திரு.வி.க., நகர், சேலம் பைபாஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர்

தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.






      Dinamalar
      Follow us