ADDED : மார் 11, 2026 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கண்ணாமூச்சியை சேர்ந்தவர் சிவசந்திரன், 33; கட்டட தொழிலாளி. இவரின் மனைவி செல்வி, 32; தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே ஆணைக்கவுண்ட-னுாருக்கு தக்காளி பழம் பறிக்கும் வேலைக்கு, செல்வி சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. * அம்மாபேட்டை அருகே ஆணைக்கவுண்டனுாரை சேர்ந்த கட்-டட மேஸ்திரி கேசவன், 43; இவரின் மனைவி கோமதி, 35; குரு-வரெட்டியூரில் ஒரு டைல்ஸ் கடையில் வேலை பார்க்கிறார். மூன்று தினங்களுக்கு முன் வேலைக்கு சென்றவர் வீடு திரும்ப-வில்லை. கணவர்களின் புகாரின்படி, அம்மாபேட்டை போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

