ADDED : ஜூன் 12, 2026 05:00 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
அருகே பிரம்மதேசம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அரவிந்த்,
27; பிரம்மதேசத்தில் ஒரு பேக்கரில் டீ மாஸ்டராக வேலை செய்கிறார்.
இவரது மனைவி ரசிகாதேவி, 21; நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு
வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், தோழிகள் வீட்டில்
விசாரித்தும் தகவல் இல்லை. அரவிந்த் புகாரின்படி அந்தியூர் போலீசார்
ரசிகாதேவியை தேடி வருகின்றனர்.
