ADDED : ஜூன் 12, 2026 04:59 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:நாமக்கல்
மாவட்டம் திருச்செங்கோடு கல்லாங்காட்டுவலசை சேர்ந்தவர்
சுப்பிரமணி, 73, கூலி தொழிலாளி. வெள்ளித்திருப்பூர் அருகே
ரெட்டிபாளையம் கிழக்கு தெருவில் மகள் வீட்டில், 10 ஆண்டுகளாக
இருந்தார்.
ஆறு மாதங்களாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டார். நேற்று
முன்தினம் வலி அதிகமானதால், சல்பாஸ் மாத்திரையை தின்று விட்டு,
குரும்பபாளையம் செல்லியாண்டியம்மன் முன் மயங்கி கிடந்தார். அவரை
மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். மருத்துவ
பரிசோதனையில் இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து
வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
