sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்படுமா? ரூ.5 கோடி நிதி குறைக்கப்படுவதால் சந்தேகம்

/

எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்படுமா? ரூ.5 கோடி நிதி குறைக்கப்படுவதால் சந்தேகம்

எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்படுமா? ரூ.5 கோடி நிதி குறைக்கப்படுவதால் சந்தேகம்

எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் கட்டடம் கட்டப்படுமா? ரூ.5 கோடி நிதி குறைக்கப்படுவதால் சந்தேகம்


ADDED : ஜூலை 07, 2025 04:23 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு எஸ்.பி., அலுவலக வளாகத்தில் திட்டமிட்டபடி இணைப்பு (கூடுதல்) கட்டடம் உரிய நிதியில் கட்டப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லை. போலீசின் பல்வேறு பிரிவு அலுவலகம் தனித்தனியே செயல்படு-கிறது. இதனால் நிர்வாக ரீதியாக மட்டுமின்றி மக்களுக்கும் பல்-வேறு பிரச்னை ஏற்படுகிறது. ஒருங்கிணைந்த வளாகமாக கட்ட நீண்ட நாட்களாக போலீஸ் சார்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்-டது.இந்நிலையில் இணைப்பு (கூடுதல்) கட்டடம், 15 கோடி ரூபாயில் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தார். தற்போது முதல்வர் அறிவித்த தொகையில் கட்டடம் கட்டப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்-ளது.

இதுபற்றி போலீசார் கூறியதாவது: போலீஸ் வீட்டு வசதி கழக டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவ், ஈரோடு எஸ்.பி., அலுவல-கத்தில் இணைப்பு (கூடுதல்) கட்டடம் கட்டும் இடத்துக்கான வரைபடத்தை, கடந்த, 1ல் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து புதிய கட்டடம் கட்ட, 10 கோடி ரூபாய் நிதி மட்டுமே ஒதுக்கப்-பட கூடும் என தெரியவருகிறது. நிதியை குறைப்பதால் திட்ட-மிட்டபடி கூடுதல் கட்டடம் கட்ட இயலாது. மாறாக கட்டுமான பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இரண்டு தளங்க-ளுடன் கூடிய கட்டடம் அமைப்பது சிரமம். ஏ.டி.எஸ்.பி., அலுவ-லகத்துக்கு மாத வாடகையை கொடுக்க அரசு தயாராக உள்ளது. இதேபோல் மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி பிரிவு அலுவ-லகம், வாடகை கட்டடத்தில் இயங்க அரசு தேவையான அளவு நிதியை வழங்குகிறது. ஆனால் அவற்றை பயன்படுத்தி கொள்வ-தில்லை. எஸ்.பி, அலுவலக வளாகத்தில் இந்த அலுவலகங்கள் செயல்படுகிறது. இதனால் பிற போலீஸ் பிரிவு அலுவலகங்க-ளுக்கு இடம் கிடைப்பதில்லை. இதே போல் எஸ்.பி., அலுவல-கத்தில் மூன்று இடங்களில் சைபர் கிரைம் அலுவலகம் (சைபர் க்ரைம் போலீஸ் ஸ்டேஷன், ஏ.டி.எஸ்.பி.அலுவலகம், சைபர் செல்) செயல்படுகிறது.

முதல்வர் அறிவித்த நிதியை முழுமையாக பயன்படுத்தி கூடுதல் கட்டடம் கட்ட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் கூடுதல் கட்டடம் கட்டிய பின்-னரும் போலீசில் உள்ள அனைத்து பிரிவுக்கும் உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும். இவ்வாறு போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us