ADDED : ஆக 01, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கவுந்தப்பாடி அருகே மேட்டுப்பாளையத்தை சேர்ந்த முருகன் மனைவி சின்னக்கண்ணா, 55; கடந்த மாதம், ௨8ம் தேதி இரவு, வீட்டருகே வைத்திருந்த ஆட்டுக்கல்லை சுத்தம் செய்தார்.
அதில் படுத்திருந்த விஷ பாம்பு கடித்தது. மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ட்டவர் நேற்று இறந்தார். கணவர் முருகன் புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.