/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேங்கிய மழைநீரில் மின்சாரம் நடந்து சென்ற பெண் மரணம்
/
தேங்கிய மழைநீரில் மின்சாரம் நடந்து சென்ற பெண் மரணம்
தேங்கிய மழைநீரில் மின்சாரம் நடந்து சென்ற பெண் மரணம்
தேங்கிய மழைநீரில் மின்சாரம் நடந்து சென்ற பெண் மரணம்
ADDED : நவ 19, 2024 01:24 AM
தேங்கிய மழைநீரில் மின்சாரம்
நடந்து சென்ற பெண் மரணம்
ஈரோடு, நவ. 19-
ஈரோடு, கைகாட்டி வலசு, பாரதி நகரை சேர்ந்த பழனிசாமி மனைவி மாதேஸ்வரி, 50; அதேபகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டருகே ஒரு அடி உயரத்துக்கு தேங்கியிருந்த மழை நீரில் நடந்து கடைக்கு சென்றார். அப்போது திடீரென சுருண்டு விழுந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து, ஈரோடு தீயணைப்பு நிலையம், மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். மின் வாரியத்தினர் மின் இணைப்பை துண்டித்தனர். மாதேஸ்வரியை மக்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. போலீஸ் விசாரணையில் மழை தண்ணீரில் மின் கசிவால் மின்சாரம் பாய்ந்தபடி இருந்துள்ளது. இதையறியாமல் சென்ற மாதேஸ்வரி, மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.