sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பெரியசேமூரில் பெண் கொலை

/

பெரியசேமூரில் பெண் கொலை

பெரியசேமூரில் பெண் கொலை

பெரியசேமூரில் பெண் கொலை


ADDED : நவ 28, 2025 12:49 AM

Google News

ADDED : நவ 28, 2025 12:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, பெரியசேமூர், எல்.வி.ஆர்., காலனியை சேர்ந்த மணி மனைவி கமலா, 60; மணி இறந்து விட்டார். இவர்களது மகன் புதுச்சேரியில் தனியார் வங்கியில் பணி செய்கிறார். ஈரோட்டில் உள்ள வீட்டில் கமலா தனியாக வசித்தார். விடுமுறை நாட்களில் மட்டும் தனது தாயாரை பார்க்க, மகன் வந்து செல்வார். பிற நாட்களில் தினமும் இரவு, 8:00 முதல், 9:00 மணிக்கு தாயாரிடம் பேசுவது வழக்கம். நேற்றிரவு தாயார் மொபைல்போனை தொடர்பு கொண்டபோது

, அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதனால் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து, வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்துள்ளார். வீட்டில் விளக்குகள் எரியாமல் இருந்த நிலையில், விளக்கை போட்டனர். அப்போது கமலா கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக இறந்து கிடந்தார். இதைப்பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்து வீரப்பன்சத்திரம் போலீசாரும் சென்று ஆய்வு நடத்தி விசாரணையில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us