sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோலாகலமாக நடந்த விசர்ஜன ஊர்வலம் ஆர்வத்துடன் பங்கேற்ற பெண்கள், இளைஞர்கள்

/

கோலாகலமாக நடந்த விசர்ஜன ஊர்வலம் ஆர்வத்துடன் பங்கேற்ற பெண்கள், இளைஞர்கள்

கோலாகலமாக நடந்த விசர்ஜன ஊர்வலம் ஆர்வத்துடன் பங்கேற்ற பெண்கள், இளைஞர்கள்

கோலாகலமாக நடந்த விசர்ஜன ஊர்வலம் ஆர்வத்துடன் பங்கேற்ற பெண்கள், இளைஞர்கள்


ADDED : ஆக 31, 2025 04:28 AM

Google News

ADDED : ஆக 31, 2025 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாநகரில் நேற்று விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம், வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது. இதில் பெண்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஈரோடு மாநகரில் கடந்த, 27ம் தேதி பல்வேறு இடங்களில், ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், ஈரோடு சம்பத் நகர் நால்ரோட்டுக்கு நேற்று மதியம் கொண்டு வரப்பட்டது. ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார்.

மாவட்ட பொது செயலாளர் கார்த்தி, மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ,. சரஸ்வதி, மாநில துணை தலைவர் சண்முக சுந்தரம், மாநில பேச்சாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்துக்கு தயாராக இருந்த சிலைகளை, ஏராளமானோர் வழிபட்டனர். 11 அடி உயர வெற்றி விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்திய பின் மாலை, 5:30 மணிக்கு ஊர்வலம் துவங்கியது.

வீரபத்ரகாளியம்மன் சிலை, ஊர்வலத்தை வழி நடத்தி சென்றது. பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தபடி சென்றனர். ஊர்வலத்தில் பெண்கள், இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஒரு சிலர் சுவாமி வேடமிட்டு வந்திருந்தனர். மொத்தம், 160 விநாயகர் சிலைகள் ஒன்றன் பின் ஒன்றாக மெகா ஊர்வலம் சென்றது. இதையொட்டி ஈரோடு மாநகரில் நேற்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

சம்பத் நகர் நால்ரோட்டில் துவங்கி அண்ணா தியேட்டர் சாலை, பெரிய வலசு நால்ரோடு, முனிசிபல் காலனி, மேட்டூர் சாலை, எம்.எஸ்.சாலை, காமராஜ் வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காவிரி சாலை, கருங்கல்பாளையம், செக்-போஸ்ட் வழியாக காவிரி ஆற்றை அடைந்தது. அங்கு பூஜிக்கப்பட்ட பின் காவிரி ஆற்றில் விடப்பட்டது. ஊர்வலத்தை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஊர்வலம் அமைதியான முறையில் நடந்தது.






      Dinamalar
      Follow us