ADDED : மே 24, 2026 05:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: மேற்காசிய போரால் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை, மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இந்த உயர்வை திரும்ப பெற வேண்டும். தட்டுப்பாடின்றியும், பழைய விலையில் கிடைக்க செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஈரோடு மாநகர் மாவட்ட மகளிர் காங்., சார்பில், ஈரோடு ஜவான்ஸ் பவன் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவி அன்னபூரணி தலைமையில், மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர் சாம்ராட் அசோக், நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, ஜானகி, கீதா, வித்யா, ஷரின்பேகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
