sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மே தினத்தில் விடுமுறை வழங்காமல் பணி:81 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு

/

மே தினத்தில் விடுமுறை வழங்காமல் பணி:81 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு

மே தினத்தில் விடுமுறை வழங்காமல் பணி:81 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு

மே தினத்தில் விடுமுறை வழங்காமல் பணி:81 கடைகள், நிறுவனங்கள் மீது வழக்கு


ADDED : மே 02, 2024 12:12 PM

Google News

ADDED : மே 02, 2024 12:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: தொழிலாளர் தினமான நேற்று, தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காமல் பணி வழங்கிய, 81 கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தலைமையில், துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தேசிய பண்டிகை தினமான தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத நிறுவனங்களை ஆய்வு செய்தனர்.

தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா, பணியாளர்கள் பணி செய்தால் அன்று அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது, 3 தினங்களுக்குள் ஒரு நாள் மாற்று விடுப்பு வழங்க நிர்வாகம் தெரிவித்து, அதற்கான படிவத்தை தொழிலாளர் துறையில் சமர்பித்துள்ளதா என, ஆய்வு செய்தனர்.

ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் பகுதியில், 42 கடை, நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 31 இடங்களிலும், 54 உணவு நிறுவனங்களில், 46 நிறுவனங்களிலும், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில், நான்கிலும் என, 100 நிறுவன ஆய்வில், 81 நிறுவனங்களில் முறையாக விடுமுறை அளிக்காமல், பணி வழங்கியது கண்டறியப்பட்டது. அந்நிறுவன உரிமையாளர்கள் மீது, தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறைகள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.






      Dinamalar
      Follow us