ADDED : ஆக 18, 2025 02:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, மூலப்பாளையம், பெரிய சடையம்பாளையம் ரோட்டை சேர்ந்த டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளி சேகர், 58; இவரின் மனைவி சீதாலட்சுமி. ஈரோடு அரசு மருத்துவமனை செவிலியர். நேற்று முன்தினம் நள்ளிரவில் மொபட்டில் வீட்டருகே சேகர் சென்றார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.