ADDED : ஜூன் 15, 2026 04:12 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டி நகராட்சி அண்ணா நகரை சேர்ந்தவர் அய்யாவு, 55; கட்டடத் தொழிலாளி. எரங்காட்டுபாளையம் டாஸ்மாக் கடை முன் மழைநீர் வடிகால் மீது அமர்ந்திருந்தார்.
கனமழை பெய்ததால் வடிகாலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மது போதையில் இருந்த அய்யாவு, வடிகாலில் தவறி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் கூச்சலிடவே சிறிது துாரம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மூழ்கி உயிரிழந்தார். புன்செய் புளியம்பட்டி போலீசார் சடலத்தை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
