தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி


ADDED : மே 11, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:சத்தியமங்கலம் பரிசல் துறை வீதி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி, 36; கூலி தொழிலாளி. நண்பர் குருநாதனுடன் சத்தியமங்கலத்தில் இருந்து புன்செய்புளியம்பட்டி நோக்கி, டூவீலரில் நேற்று காலை சென்றார். பைக்கை குருநாதன் ஓட்டினார்.

விண்ணப்பள்ளி-சாத்தனுார் பிரிவு அருகே, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர். இதில் கார்த்தி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார்.

குருநாதன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சத்தி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். புளியம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தில் பலியான கார்த்திக்கிற்கு, திருமணமாகி குழந்தைகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us