ADDED : ஜூன் 08, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:பெருந்துறையை
அடுத்த, கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி, 45, கூலி தொழிலாளி.
டி.வி.எஸ்., மொபட்டில் பெருந்துறை நோக்கி நேற்று மதியம் வந்தார்.
ஓலப்பாளையம் பிரிவு அருகே கார் மோதியதில் பலத்த காயமடைந்தார்.
பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்படும் வழியில் இறந்தார். பெருந்துறை போலீசார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
