ADDED : ஜூன் 09, 2026 02:08 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்; தாராபுரத்தை அடுத்த மணக்கடவு, அண்ணா நகரை சேர்ந்தவர் கந்தசாமி, 50; மணக்கடவு பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், நடந்து சென்றார்.
அப்போது சேலம் ரெட்டியூரை சேர்ந்த சரவணன், 36, ஓட்டி வந்தபைக், எதிர்பாராத விதமாக கந்தசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கந்தசாமி சம்பவ இடத்தில் பலியானார். சரவணன் காயமிதும் இன்றி தப்பினார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
