ADDED : பிப் 21, 2026 09:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு திண்டலில் உள்ள வேலாயுதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கவுள்ள நிலையில், 33 குண்டம் அமைத்து சிறப்பு யாக பூஜை நடக்கிறது.
நேற்று நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கோபுர கலசஸ்தாபனம், மூலஸ்தான மற்றும் பரிவார மூர்த்திகள் யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடந்தது.

