/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்
/
பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்
ADDED : ஜன 15, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரியூர் அம்மனுக்கு
மஞ்சள் நீர் உற்சவம்
கோபி, :கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா கடந்த, ௯ம் தேதி நடந்தது.
இதையடுத்து மலர் பல்லக்கில் ஊர்வலமாக வந்த அம்மனுக்கு, கோபியில் தெப்போற்சவம் நடந்தது.
அதன்பின் கோபி ஈஸ்வரன் கோவில் விதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு விஜயம் செய்த அம்மனுக்கு, மஞ்சள் நீர் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.
இதை தொடர்ந்து கோபி சாரதா மாரியம்மன் கோவிலுக்கு விஜயம் செய்த அம்மனுக்கு, பல்வேறு வாசனை திரவியங்களால் அர்ச்சகர்கள் வேத
மந்திரம் முழங்க, மஞ்சள் நீர் உற்சவம் கோலாகலமாக நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.