/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வண்டல் மண் எடுக்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
/
வண்டல் மண் எடுக்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 05, 2024 02:48 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்ட நீர் வளத்துறை, ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் உள்ள
அணைகள், குளம், குட்டைகளில் வண்டல் மண்ணை, விவசாய பயன்பாட்டுக்கு
இலவசமாக எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இதன்படி
நடப்பாண்டு, 228 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி
தரப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் மண்ணை இலவசமாக எடுத்து செல்ல,
விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். மண் எடுக்க, அந்தந்த பகுதி
தாசில்தார்களே, இணைய வழியில் அனுமதி வழங்குவர்.
மண் தேவைப்படும்
விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர், தாங்கள் வசிக்கும் வட்டத்துக்கு
அருகே, அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் மண் எடுக்க
விண்ணப்பிக்கலாம். உரிய ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
விண்ணப்பங்கள்,
வருவாய் துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இணைய தரவுகளின் கீழ், நில
ஆவணங்கள் சரி பார்த்து, மண் அல்லது வண்டல் மண் எடுக்க, அனுமதி
வழங்கப்படும். விவசாய பயன்பாட்டுக்கு, நஞ்சை நிலத்துக்கு, 2
ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு ஏக்கருக்கு, 75 கனமீட்டர் அல்லது ஒரு
ெஹக்டேருக்கு, 185 கன மீட்டர் அளவில் வழங்கப்படும்.
இதேபோல்
புன்செய் நிலத்துக்கு, 2 ஆண்டுக்கு ஒரு முறை, 1 ஏக்கருக்கு 90
கனமீட்டர் அல்லது ஒரு ெஹக்டேருக்கு, 222 கனமீட்டர் அளவில்
வழங்கப்படும்.
மண் பாண்டம் தயாரிக்க, 60 கன மீட்டர் அளவிலும், சொந்த
வீட்டு உபயோகத்துக்கு, 30 கன மீட்டர் அளவில் இலவசமாக அனுமதி
வழங்கப்படும். tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம்.