/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீடு புகுந்து பெண்ணிடம் தாலி பறித்த வாலிபர் கைது
/
வீடு புகுந்து பெண்ணிடம் தாலி பறித்த வாலிபர் கைது
ADDED : ஜன 04, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீடு புகுந்து பெண்ணிடம்தாலி பறித்த வாலிபர் கைது
தாராபுரம், ஜன. 4-
தாராபுரத்தை அடுத்த சின்னக்காம்பாளையத்தை சேர்ந்தவர் பேபி ஷாலினி, 30; இவரது பக்தத்து வீட்டை சேர்ந்தவர் சபரி மணிகண்டன், 28; நேற்று முன்தினம் மதியம் பேபி ஷாலினியின் வீட்டுக்குள் புகுந்து, இரண்டரை பவுன் தாலிக்கொடி, கால் பவுன் கம்மல் மற்றும் கொலுசை, மிரட்டி பறித்துச் சென்றார். புகாரின்படி அலங்கியம் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் அவரை நேற்று மதியம் கைது செய்தனர். நகையை பறிமுதல் செய்து, மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

