ADDED : டிச 03, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை அருகே தகடூரில் முருங்கை அம்மன் கோவில் உள்-ளது. இங்கு சில நாட்களுக்கு முன், கருவறை முன்பிருந்த உண்-டியல் பணம் திருட்டு போனது. இதில் ஈடுபட்ட ஆசாமியின் உருவப்படத்தையும் சிசிடிவி கேம-ராவில்
சிக்கியிருந்தது. இந்நிலையில் அதே ஆசாமி, நேற்று மீண்டும் கோவிலுக்கு வந்தார்.
பூசாரி உஷாரடைந்து ஆசாமியை பிடித்தார். பிறகு சென்னிமலை போலீசில்
ஒப்படைத்தனர். விசார-ணையில் அவல்பூந்துறை, சேமூரை சேர்ந்த தேசிங்குராஜா,
23, என்பது தெரிந்தது. கைது செய்த போலீசார், பெருந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி,
பெருந்துறை கிளை சிறையில் அடைத்-தனர்.