ADDED : ஜூலை 10, 2026 05:48 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:அந்தியூர்
தாலுகாவை சேர்ந்த தொழிலாளியின், 15 வயது மகள் காணாமல் போனார்.
சிறுமியின் பெற்றோர் புகாரின்படி அந்தியூர் போலீசார் தேடும் பணியில்
ஈடுபட்டனர்.
இதில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்
பகுதியை சேர்ந்த வைகுண்டம், 20; என்ற வாலிபருடன் இன்ஸ்டாகிராமில்
சிறுமி பழகியதும், அவருடன் சிறுமி சென்றதும் தெரிந்தது. வைகுண்டத்தை
கைது செய்த அந்தியூர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு
செய்து. பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை
பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
