ADDED : மே 07, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:கோபி அருகே ஆயிபாளையத்தை சேர்ந்தவர் கார்த்தி, 39, ஆம்னி வேன் டிரைவர்: இவர் கடந்த, 5ம் தேதி மாலை, 6:30 மணிக்கு அதே பகுதியில் தனது பஜாஜ் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தார்.
சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கார்த்தி இறந்தார். இதுகுறித்து அவரின் தந்தை மாணிக்கம், 69, கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.