sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை

/

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை

உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை


ADDED : ஜூலை 07, 2024 04:33 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 04:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை, ஒரு லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா, புகைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம், 48; இவர் மும்பை நகராட்சியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமதி, 41; மகன்கள் பிரவீன்குமார், திவாகர், கவியரசன் ஆகியோருடன் புகைப்பட்டியில் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சுமதி மகன்களுடன் வீட்டை பூட்டிக்கொண்டு மேல்மலையனூர் கோவிலுக்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று காலை வீட்டிற்கு திரும்பினர். அப்போது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 10 சவரன் நகைகள், ரூ.ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 லட்சமாகும்.

இது குறித்து சுமதி கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையடித்து சென்று குற்றவாளியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us