sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

/

தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


ADDED : மார் 04, 2025 03:01 AM

Google News

ADDED : மார் 04, 2025 03:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : பூட்டிய வீடுகளில திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர்கள் கனகவள்ளி, விஜயராகவன் தலைமையிலான போலீசார் கடந்த 1ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏமப்பேர் பூங்காவில் சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் ராஜா (எ) ராக்கெட் ராஜா, 27; பரமனத்தம் துரைராஜ் மகன் பிரசாந்த், 32; என்பதும், பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிந்தது. கடந்த 21ம் தேதி, மோ.வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்த வி.ஏ.ஓ., வினோத், 41; வீட்டில் 3 கிராம் தங்க காசுகள் மற்றும் 4 வெள்ளி கொலுசுகள் உட்பட 267 கிராம் வெள்ளி நகைகளை திருடியது தெரிந்தது. அதேபோல், கடந்த 20ம் தேதி நிறைமதி மணி, 35; என்பவரது வீட்டில் செயின், ஜிமிக்கி உள்ளிட்ட 4 சவரன் தங்க நகைகள் மற்றும் கல்லாநத்தம் பெரியசாமி, 41; வீட்டில் 11 கிராம் தங்கம், 300 கிராம் வெள்ளி நகைகளை திருடியுள்ளனர்.

திருடிய நகைகளில் சிலவற்றை கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் மற்றும் சின்னசேலம் பகுதியில் உள்ள கடைகளில் அடகு வைத்துள்ளனர். தொடர்ந்து, ராஜாவின் வீட்டிலிருந்த 42 கிராம் தங்கம் மற்றும் 535 கிராம் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து, ராஜா மற்றும் பிரசாந்த் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

வலது காலில் முறிவு


திருடிய வீடுகளை அடையாளம் காண்பிப்பதற்காக இருவரையும் போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டும் என ராஜா தெரிவித்தவர், திடீரென தப்பியோடி கோமுகி ஆற்றுபாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில், ராஜாவின் வலது காலில் முறிவு ஏற்பட்டது. உடன் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us