sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் 20 முதல் 25 சதவீத கட்டண சலுகை

/

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் 20 முதல் 25 சதவீத கட்டண சலுகை

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் 20 முதல் 25 சதவீத கட்டண சலுகை

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் 20 முதல் 25 சதவீத கட்டண சலுகை


ADDED : ஜூன் 13, 2024 12:20 AM

Google News

ADDED : ஜூன் 13, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாமாண்டு இளநிலை பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 20 - 25 சதவீதம் வரை சலுகை வழங்கப்படுவதாக சேர்மன் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் சேர்மன் டாக்டர் மகுடமுடி கூறியதாவது: மாவட்டத்தில் புதுடில்லியின் 'நாக்' தரச்சான்று பெற்ற ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினிஅறிவியல், பி.சி.ஏ., பி.காம்., மற்றும் பி.பி.ஏ., ஆகிய 9 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன.

கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, உடனடியாக பணி கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது.

மேலும், கல்வித்திறனை மேம்படுத்த இணையதள வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம், நுாற்றுக்கணக்கான புத்தகங்களுடன் கூடிய நுாலகம், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நிர்வாக குழு சார்பில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் நலன் கருதி, மதிப்பெண் மற்றும் விளையாட்டு அடிப்படையில் இளநிலை பாட பிரிவில் முதலாமாண்டு சேருபவர்களுக்கு கல்வி கட்டணத்தில் 20-25 சதவீதம் வரை சலுகை வழங்கப்படுகிறது.

மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பேருந்து கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இதுதவிர, அரசு வழங்கும் கல்வி உதவித்தொகையும் மாணவர்களுக்கு பெற்றுத்தரப்படுகிறது.

இவ்வாறு சேர்மன் மகுடமுடி கூறினார்.






      Dinamalar
      Follow us