/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
/
புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
ADDED : மே 26, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி பகுதியில் போலீசார் நேற்று நடத்திய திடீர் ஆய்வில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ், விமல் பாக்கு ஆகியவற்றை வைத்து விற்பனை செய்துவந்த சாத்தனுாரை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேசன், 35; பலராமன் மகன் சந்திரசேகரன்,63; கள்ளக்குறிச்சி ஆண்டாள் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பரணிதரன்,36; ஆகிய 3 பேர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.