sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மாவட்டத்திற்கு ரூ.147 கோடியில் 4,200 கனவு இல்ல திட்ட வீடுகள்

/

மாவட்டத்திற்கு ரூ.147 கோடியில் 4,200 கனவு இல்ல திட்ட வீடுகள்

மாவட்டத்திற்கு ரூ.147 கோடியில் 4,200 கனவு இல்ல திட்ட வீடுகள்

மாவட்டத்திற்கு ரூ.147 கோடியில் 4,200 கனவு இல்ல திட்ட வீடுகள்


ADDED : செப் 14, 2024 08:07 AM

Google News

ADDED : செப் 14, 2024 08:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின்கீழ் ரூ.147 கோடி மதிப்பீட்டில் 4,200 வீடுகள் கட்டப்பட உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தினை கலெக்டர் பிரசாந்த் நேற்று பார்வையிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின்கீழ் குடிசையில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு புதிதாக ஆர்.சி.சி. வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் காளசமுத்திரம், வி.மாமந்தூர் ஊராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமானப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின்கீழ் சின்னசேலம் ஒன்றியம்-649 வீடுகள், கள்ளக்குறிச்சி-568, கல்வராயன்மலை-101, திருக்கோவிலூர்-489, ரிஷிவந்தியம்-674, சங்கராபுரம்-342, தியாகதுருகம்-611, திருநாவலூர்-372, உளுந்தூர்பேட்டை-394 வீடுகள் என மொத்தம் 9 ஊராட்சி ஒன்றியங்களில் 4,200 வீடுகள் தலா ரூ.3.50 லட்சம் என மொத்தம் ரூ.147 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

இதில் பயனாளிகள் வீடு கட்டுவதற்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய வீடு கட்டும் பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு விரைவாக கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்களை பொதுமக்கள் உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.

பி.டி.ஓ.,க்கள் ரவிசங்கர், ரெங்கராஜன், திட்டப் பயனாளிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us