/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தம்பதியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
/
தம்பதியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு
ADDED : செப் 11, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சி அருகே கணவன், மனைவியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பொற்படாக்குறிச்சி சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி கவுசல்யா, 28.
இவரிடம் கடந்த ஆக., 23ம் தேதி அதே ஊரைச் சேர்ந்த சந்திரபாபு மகன் லோகநாதன்,20, தகராறு செய்தார்.
இதனை விஜயகுமார் தட்டிக் கேட்டார். இருவரையும் லோகநாதன் இரும்பு பைபால் தாக்கினார்.
புகாரின் பேரில் லோகநாதன் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.