sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

விவசாயியிடம் பணத்தை பெற்று ஏமாற்றிய இருவர் மீது வழக்கு

/

விவசாயியிடம் பணத்தை பெற்று ஏமாற்றிய இருவர் மீது வழக்கு

விவசாயியிடம் பணத்தை பெற்று ஏமாற்றிய இருவர் மீது வழக்கு

விவசாயியிடம் பணத்தை பெற்று ஏமாற்றிய இருவர் மீது வழக்கு


ADDED : செப் 14, 2024 07:56 AM

Google News

ADDED : செப் 14, 2024 07:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலுார் தாலுகா, நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் முனியன்,36; இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.8.60 லட்சம் கடன் பெற்று டிராக்டர் வாங்கினார். 3 மாத தவணை தொகை செலுத்திய முனியன், அதற்கு பிறகு தவணை தொகை செலுத்தவில்லை.

இதனால், நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் டிராக்டரை எடுத்து சென்றுள்ளனர். தொடர்ந்து, முனியன் ரூ.6.30லட்சம் செலுத்திய நிலையில், டிராக்டர் தராமல் இருந்துள்ளனர்.

இது குறித்து முனியன் கேட்டதற்கு பணம் செலுத்தவில்லை என நிதி நிறுவன அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நிதி நிறுவன ஊழியர் மணிகண்டன், ரமேஷ் ஆகியோர் தன்னிடம் பணத்தை பெற்று, நிதி நிறுவனத்தில் செலுத்தாமல் ஏமாற்றி விட்டதாகவும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் முனியன் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், மணிகண்டன், ரமேஷ் ஆகிய இருவர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us