sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் பெறலாம் வேளாண் இணை இயக்குனர் தகவல்

/

மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் பெறலாம் வேளாண் இணை இயக்குனர் தகவல்

மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் பெறலாம் வேளாண் இணை இயக்குனர் தகவல்

மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் பெறலாம் வேளாண் இணை இயக்குனர் தகவல்


ADDED : செப் 09, 2024 06:08 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறுச்சி மாவட்டத்தில் மின்னணு பண பரிவர்த்தனை மூலம் வேளாண் இடுபொருட்கள் பெறும் வசதி துவங்கப்பட்டுள்ளது.

மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்ட அனைத்து முதன்மை வேளாண் விரிவாக்க மையங்களில் மின்னணு பண பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு தேவையான நெல், உளுந்து, மணிலா விதைகள், நுண்ணுாட்ட கலவைகள், உயிர் உரங்கள், ஜிங்சல்பேட், ஜிப்சம் உள்ளிட்ட இடுபொருட்கள், அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

அனைத்து முதன்மை வேளாண் விரிவாக்க மையங்களிலும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை ஏ.டி.எம்., டெபிட், கிரெடிட் கார்டு, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட மின்னணு வசதிகள் கொண்ட பணமில்லா மின்னணு பரிவர்த்தனை மூலம் அரசு கணக்கில் செலுத்தி பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து முதன்மை வேளாண் விரிவாக்க மையங்களுக்கும் பணம் இல்லா மின்னணு பரிவர்த்தனை செய்யும் கருவி வழங்கப்பட்டுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து முதன்மை வேளாண் விரிவாக்க மையம் மூலம் இடுபொருட்களை வாங்க வரும் விவசாயிகள் இடுபொருட்களுக்கான முழு தொகை அல்லது பங்களிப்பு தொகையை மின்னணு பண பரிவர்த்தனை மூலம் செலுத்தி வேளாண் இடுபொருட்களை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us