sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மண் பரிசோதனை அடிப்படையில் உரம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை

/

மண் பரிசோதனை அடிப்படையில் உரம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை

மண் பரிசோதனை அடிப்படையில் உரம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை

மண் பரிசோதனை அடிப்படையில் உரம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை


ADDED : ஏப் 28, 2024 04:40 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : மண் பரிசோதனை அடிப்படையில்தான் உரம் இட வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் வயல்களில் உரமிடுவதால், தேவைக்கு அதிகமாக ஏற்படும் உரச்செலவினை குறைக்கலாம்.

ஒவ்வொரு மண் வகைகளிலும் அதன் தன்மைக்கேற்ப ஊட்டச்சத்து மற்றும் நுண்ணுாட்ட சத்துகள் பயிர்களுக்கு கிடைக்கிறது. இந்த சத்துகள் மண்ணில் எந்த அளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்கு மண்பரிசோதனை செய்ய வேண்டும்.

எனவே விவசாயிகள் மண் பரிசோதனை நிலையத்தில் 30 ரூபாய் செலுத்தி தங்கள் மண்ணை பரிசோதனை செய்து மண்ணில் உள்ள பேரூட்ட மற்றும் நுண்ணுாட்ட சத்துகளின் வளத்திற்கு ஏற்ப பயிர்களுக்கு தழை, மணி, சாம்பல் சத்து மற்றும் நுண்ணுாட்ட சத்துகள் இட வேண்டும்.

இதன் மூலம் உரச்செலவு குறைவதோடு மண்ணின் வளத்தைப் பெருக்கி அதிக மகசூல் பெறலாம். அதுமட்டுமன்றி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பாசனத்திற்கு பயன்படுத்தும் நீரின் தன்மையையும் பரிசோதனை நிலையத்தில் 30 ரூபாய் செலுத்தி அறிந்து கொள்ளலாம்.

விவசாயிகள் தங்கள் மண்ணின் வளத்தை அதிகரிக்க உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் மற்றும் நெல், சிறுதானியம், பயறு வகைகள், வேர்க்கடலை, கரும்பு மற்றும் தென்னைக்கான நுண்ணுாட்ட உரங்களை வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் பெற்று இடுவதன் மூலம் கூடுதல் மகசூல் பெறலாம்.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அனைவரும் சின்னசேலம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இயங்கிவரும் மண்பரிசோதனை நிலையத்தில் தங்கள் நிலத்தின் மண் மற்றும் பாசன நீர் மாதிரிகளை பரிசோதனை செய்து பயனடைய வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us