ADDED : மே 25, 2024 01:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜான்விக்டர் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார். கடந்த 2001ம் ஆண்டு பி.எஸ்சி., - ஐ.எஸ்.எம்., பயின்ற மாணவ, மாணவிகள் 22 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து தங்களது கல்லுாரி காலத்தில் நடந்த பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து, முன்னாள் மாணவ, மாணவிகள் சார்பில் கல்லுாரி நிர்வாகத்திற்கு நினைவு பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் கல்லுாரி தாளாளர் குமார், பொறியாளர் கோவிந்தராஜூ, துணைத்தலைவர் மணிவண்ணன், முன்னாள் மாணவர்கள் மூர்த்தி, ரவிசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

