/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பம் வரவேற்பு
/
ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பம் வரவேற்பு
ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பம் வரவேற்பு
ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஆக 05, 2024 12:25 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்கள், பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், 10 பேர் கொண்ட குழு அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு தலா 3 லட்சம் ரூபாய் வீதம் தமிழகம் முழுதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி, 5 சிங்கிள் நீடில் இயந்திரங்கள் தலா 20 ஆயிரம் ரூபாய். ஓவர் லாக்கிங் இயந்திரம் 30 ஆயிரம் ரூபாய். கட்டிங் மிஷின் 15 ஆயிரம் ரூபாய். இஸ்திரி டேபிள் 30 ஆயிரம் ரூபாய் மற்றும் இதர செலவினம் 10 ஆயிரம் ரூபாய்.
இடைநிகழ் செலவினம் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பணி மூலதனம் 50 ஆயிரம் ரூபாய் என 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
மேலும், பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகளாக, குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பயனாளிகளின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள், தகுதியான குழுக்களை அமைத்து, குழுவின் மூலம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று பயனடையலாம்.