sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கல்வராயன்மலை வனப்பகுதியில் 'ட்ரோன்' மூலம் ஏ.டி.ஜி.பி., ஆய்வு

/

கல்வராயன்மலை வனப்பகுதியில் 'ட்ரோன்' மூலம் ஏ.டி.ஜி.பி., ஆய்வு

கல்வராயன்மலை வனப்பகுதியில் 'ட்ரோன்' மூலம் ஏ.டி.ஜி.பி., ஆய்வு

கல்வராயன்மலை வனப்பகுதியில் 'ட்ரோன்' மூலம் ஏ.டி.ஜி.பி., ஆய்வு


ADDED : ஜூலை 22, 2024 01:51 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கச்சிராயபாளையம் காவல் நிலையம் மற்றும் கல்வராயன்மலையில் ஆய்வு மேற்கொண்ட ஏ.டி.ஜி.பி., ட்ரோன் கேமரா மூலம், சாராயம் காய்ச்சப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மற்றும் கடலுார் மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு குறித்தும், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாகவும் ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் ஆசிர்வாதம் நேற்று முன்தினம் கடலுாரில் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து நேற்று கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின், கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை, சேராப்பட்டு, குறும்பலுார், ஆவலுார், சிறுகலுார் உள்ளிட்ட பகுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்பகுதிகளில் சாராயம் காய்ச்சியது மற்றும் விற்பனை வழக்குகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

இதுவரையில் சாராயம் காய்ச்சப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

தொடர்ந்து, சிறுகலுார் வனப்பகுதியில் இருந்து ட்ரோன் கேமரா மூலம் மலையில் எங்கேனும் சாராயம் காய்ச்சப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

கரியாலுார் காவல் நிலையத்தில் பணியில் உள்ள போலீசாரின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்து, கூடுதல் போலீசாரை நியமிப்பது குறித்தும், கல்வராயன்மலை பகுதியில் சுழற்சி அடிப்படையில் பட்டாலியன் போலீசாரை பணியமர்த்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார். வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ரா கார்க், எஸ்.பி., ரஜத் சதுர்வேதி உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us