/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை
/
ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : மார் 15, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; விளக்கூரில் நெஞ்சு வலியால் ஆட்டோ டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த விளக்கூரையைச் சேர்ந்தவர் ஏழுமலை, 43; ஆட்டோ டிரைவர். கடந்த 2 ஆண்டுகளாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனால், மனமுடைந்த அவர் வீட்டின் வெளியே உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.