/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கலாமே...
/
கடைசி நேர பதற்றத்தை தவிர்க்கலாமே...
ADDED : ஏப் 29, 2024 05:33 AM

மாதிரி 'நீட்' தேர்வு காலை 10.00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டு, 9:30 மணிக்குள் தேர்வு அறையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதை பெரும்பாலான மாணவ, மாணவிகள் கடைபிடித்து குறிப்பிட்ட நேரத்திற்கு வந்திருந்தனர். ஒரு சில மாணவர்கள் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக ஓடி வந்தனர்.
இதுபோல் கடைசி நேரத்தில் தேர்வு மையத்திற்கு வந்தால் தேசிய தேர்வு முகமை விதிமுறைகளின் படி 'நீட்' தேர்வு எழுத அனுமதி இல்லை. மேலும், பதற்றத்தில் சரியாக தேர்வு எழுதவும் முடியாது. படித்ததும் மறந்துவிடும். எனவே, தேர்வு துவங்க ஒரு மணிநேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்தில் இருக்க வேண்டும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

