sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய பலே ஆசாமி 11 மாதங்களுக்கு பின் கைது

/

பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய பலே ஆசாமி 11 மாதங்களுக்கு பின் கைது

பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய பலே ஆசாமி 11 மாதங்களுக்கு பின் கைது

பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய பலே ஆசாமி 11 மாதங்களுக்கு பின் கைது


ADDED : மே 29, 2024 05:03 AM

Google News

ADDED : மே 29, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : பட்டபகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய பலே ஆசாமியை 11 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கிள்ளனுாரை சேர்ந்தவர் ராஜகோபால்,53; ஓட்டல் நடத்தி வருகிறார். இவர், கடந்தாண்டு ஜூன் 16ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார்.

அன்று பகல் 12 மணிக்கு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 19 சவரன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அதில், அவர் திருச்சி மாவட்டம் எடமலைபட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் சுதாகர்,27; என்பதும், இவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ராஜகோபால் வீட்டில் திருடியதும், இவர் மீது எடமலைபட்டியில் ஒரு கொலை வழக்கு, ஈரோட்டில் 4 திருட்டு வழக்கு மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது தெரிய வந்தது.

அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்து, 10 சவரன் நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை உளுந்துார்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

வழக்கு செலவிற்காக திருட்டு

கொலை வழக்கில் திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்ட சுதாகருக்கு, பிற குற்றவாளிகளுடன் நட்பு ஏற்பட்டது. அவர்களின் ஆலோசனைப்படி, வழக்கு செலவிற்காக, பகலில் பூட்டிய வீடுகளில் புகுந்து திருடியது தெரிய வந்துள்ளது.








      Dinamalar
      Follow us