sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

நகை பாலிஷ் போடுவதாக மோசடி பீஹார் வாலிபர்களுக்கு அடி உதை

/

நகை பாலிஷ் போடுவதாக மோசடி பீஹார் வாலிபர்களுக்கு அடி உதை

நகை பாலிஷ் போடுவதாக மோசடி பீஹார் வாலிபர்களுக்கு அடி உதை

நகை பாலிஷ் போடுவதாக மோசடி பீஹார் வாலிபர்களுக்கு அடி உதை


ADDED : பிப் 23, 2025 01:47 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்:நகை பாலிஷ் போடுவதாக மோசடி செய்த பீஹார் வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த ஆருர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி மகாலட்சுமி, 30. இவரிடம் நேற்று காலை, வடமாநில வாலிபர்கள் இருவர், நகை பாலிஷ் போட்டுத் தருவதாக கூறினர்.

நம்பிய மகாலட்சுமி, தான் அணிந்திருந்த 3 சவரன் செயினை கழற்றி கொடுத்தார்.

சற்று நேரம் கழித்து செயினை பல துண்டுகளாக்கி கொடுத்துவிட்டு இருவரும் தப்பி ஓட முயன்றனர்.

மகாலட்சுமி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில், பாலீஷ் போடுவதாக கூறி, செயினில் இருந்து 6 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்திருப்பது தெரியவந்தது. இருவரையும் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.

சங்கராபுரம் போலீசார் இருவரையும் மீட்டு விசாரித்தனர். அவர்கள், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சோனுகுமார், 25, சந்தன்குமார், 24, என்பது தெரிந்தது.

இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us