sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பைக் திருட்டு: மூன்று பேர் கைது

/

பைக் திருட்டு: மூன்று பேர் கைது

பைக் திருட்டு: மூன்று பேர் கைது

பைக் திருட்டு: மூன்று பேர் கைது


ADDED : ஜூலை 18, 2024 05:27 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : சின்னசேலத்தில் வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த ராயல்என்பீல்டு பைக் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் வடுகர் தெருவை சேர்ந்தவர் காந்தி மகன் கோபாலகிருஷ்ணன்,30; இவர் கடந்த 13ம் தேதி இரவு தனது டிஎண்15 கே2280 என்ற பதிவெண் கொண்ட ராயல்என்பீல்டு பைக்கினை வீட்டிற்கு முன் நிறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, மறுநாள் 14ம் தேதி காலை பார்த்த போது பைக் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் சின்னசேலம் போலீசில் புகார் அளித்தார்.

இந்நிலையில், சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாப் மற்றும் போலீசார் கூகையூர் கூட்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த 3 நபர்களை நிறுத்தி விசாரித்ததில் முன்னுக்கு, பின் முரணாக பதிலளித்ததால் போலீசார் சந்தேகமடைந்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், கோயம்புத்துார் பீளமேட்டை சேர்ந்த சக்திவேல் மகன் தமிழரசன்,27; சிறுபாக்கத்தை சேர்ந்த முருகேசன் மகன் பிரகாஷ்,23; சேகர் மகன் அஜித்,25; என்பதும், கோபாலகிருஷ்ணனின் ராயல்என்பீல்டு பைக்கினை திருடியதும் தெரிந்தது.

தொடர்ந்து, 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ராயல்என்பீல்டு பைக்கினை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us