/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 26, 2024 11:12 PM
கச்சிராயபாளையம்: மாத்துார் கிராமத்தில் முன் விரோத தகராறில் தாக்கி கொண்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கச்சிராயபாளையம் அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் கண்ணன், 42; இவருக்கும், இவரது உறவினரான வைத்திலிங்கம் மகன் திருமால், 27; என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்த புகாரில் இரு தரப்பைச் சேர்ந்த திருமால், பிரபு, மற்றும் கண்ணன், சின்னபொண்ணு, முனியப்பிள்ளை உள்ளிட்ட ஐந்து பேர் மீது கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

