/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குழந்தை திருமணம் 5 பேர் மீது வழக்கு
/
குழந்தை திருமணம் 5 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 27, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி, ; கள்ளக்குறிச்சியில் குழந்தை திருமணம் செய்தது தொடர்பாக 5 பேர் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த நின்னையூரை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் சத்தியமூர்த்தி,20; இவர் கடந்த 2024ம் ஆண்டு ஆக., மாதம் 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக மகளிர் ஊர்நல அலுவலர் முனியம்மாள் அளித்த புகாரின் பேரில், சிறுமியை திருமணம் செய்த சத்தியராஜ், அவரது பெற்றோர்கள் ராமமூர்த்தி, தவமணி, உறவினர்கள் ராமலிங்கம், பஞ்சவர்ணம் ஆகிய 5 பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.