ADDED : ஜூலை 14, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பத்மஜா கொடியசைத்து துவக்கினார்.
மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பழைய கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில் சுய கணக்கெடுப்பு வரும் 17 முதல் 31ம் தேதி வரையிலும், வீட்டு பட்டியல், வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் வரும் ஆக.1 முதல் ஆக.30 வரை நடக்க உள்ளது என பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியின் டி.ஆர்.ஓ., ஜீவா, ஆர்.டி.ஓ., முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
