ADDED : மார் 10, 2025 12:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; பெண்ணிடம் தாலி செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த கோட்டையம்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி காசியம்மாள், 38; கடந்த, 6ம் தேதி வரஞ்சரம் அடுத்த சித்தலுார் பெரியாயி அம்மன் கோவிலில், மாசி திருவிழாவில் அன்னதானம் வழங்கினார்.
அப்போது, அவரது கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.