/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீரபாண்டியில் சித்திரை வசந்த விழா துாக்கு தேரை சுமந்து பக்தர்கள் வீதியுலா
/
வீரபாண்டியில் சித்திரை வசந்த விழா துாக்கு தேரை சுமந்து பக்தர்கள் வீதியுலா
வீரபாண்டியில் சித்திரை வசந்த விழா துாக்கு தேரை சுமந்து பக்தர்கள் வீதியுலா
வீரபாண்டியில் சித்திரை வசந்த விழா துாக்கு தேரை சுமந்து பக்தர்கள் வீதியுலா
ADDED : ஏப் 30, 2024 08:05 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த வீரப்பாண்டி திரவுபதி அம்மன் கோவில் சித்திரை வசந்த விழாவில் பக்தர்கள் பிரம்மாண்ட துாக்கு தேரை தோளில் சுமந்து சென்றனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அரகண்டநல்லுார் அடுத்த வீரபாண்டியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி பாரதக்கதை, சுவாமி வீதியுலா நடந்தது.
நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட கரகம் வீதியுலா நடந்தது. தொடர்ந்து 7 டன் எடையுடன், 40 அடி உயரம் கொண்ட பிரம்மாண்டமான துாக்குத்தேரில் திரவுபதி சமேத அர்ஜூனன், கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விரதமிருந்து தேரை தோளில் சுமந்து 3 கி.மீ., சுற்றளவு உள்ள கிராமத்தை வலம் வந்தனர்.
நேற்று காலை 10:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு தேர் மீண்டும் வீதியுலா துவங்கியது. அரண்மனை வீதியை வந்தடைந்ததும் தேர் சவாரி செய்யும் வைபவம் நடந்தது.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் அர்ஜூனன் தபசு, விராட பருவ மாடு வலைத்தல், அரவாண் களபலி என பாரத போர் காட்சிகள் தத்ரூபமாக அரங்கேற்றப்பட்டது. மாலை தேர் நிலையை அடைந்தவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீமிதி விழா நடந்தது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
துாக்குதேர் விழாவைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

