sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஊட்டச்சத்து விழா விழிப்புணர்வு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு

/

ஊட்டச்சத்து விழா விழிப்புணர்வு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு

ஊட்டச்சத்து விழா விழிப்புணர்வு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு

ஊட்டச்சத்து விழா விழிப்புணர்வு போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு


ADDED : செப் 14, 2024 07:57 AM

Google News

ADDED : செப் 14, 2024 07:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலை-அறிவியல் கல்லுாரியில் மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் பரிசு வழங்கினார்.

கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு அரசு கலை-அறிவியல் கல்லுாரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் பாராட்டுச் சான்றிதழ்கள் பேசியதாவது:

ஊட்டச்சத்து மாத விழா குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாணவிகளுக்கு சிறுதானிய உணவு தயாரிக்கும் போட்டி, பாரம்பரிய உணவுப் பொருட்களை தயாரிக்கும் போட்டி, அடுப்பு இல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை தயாரிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது.

மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு மற்றும் அறுவடை செய்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும வகையில் கோலப்போட்டி மற்றும் ஓவியப் போட்டியும், ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. நாட்டின் எதிர்காலமாக திகழ்கின்ற மாணவர்களுக்கு கல்வி தான் முன்னேற்றத்தை அளிக்கும். எனவே மாணவ, மாணவியர்கள் நன்றாக படித்து, உயர்கல்வி பெற்று, நல்ல வேலைவாய்ப்பு பெற்று வாழ்வில் முன்னேற வேண்டுமென கலெக்டர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர் செல்வி, அரசு கலை -அறிவியல் கல்லுாரி முதல்வர் முனியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us