
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: அக்கராயபாளையம் நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கச்சிராயபாளையம் அடுத்த அக்கராயபாளையத்தில், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அங்கு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் நடைமுறை, விலை நிலவரம், நெல்லின் ஈரப்பதம் மற்றும் கொள்முதல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து, நேற்று கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.
அப்போது, முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமார், கண்காணிப்பாளர் கார்த்திக் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.