sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

அரங்கநாதர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

/

அரங்கநாதர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

அரங்கநாதர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

அரங்கநாதர் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி


ADDED : பிப் 28, 2025 11:40 PM

Google News

ADDED : பிப் 28, 2025 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரிஷிவந்தியம்; ஆதி திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.

வாணாபுரம் அடுத்த ஆதி திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த, 11 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், கோவில் திருப்பணிக்காக - 2; தற்காலிகமாக - 6; மற்றும் கோமாதா பராமரிப்புக்கு, ஒரு உண்டியலும் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு செப்., 25ம் தேதி உண்டியல் திறக்கப்பட்டது.

இந்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. கள்ளக்குறிச்சி அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மேற்பார்வையில் அனைத்து உண்டியல்களும் திறக்கப்பட்டன. செயல் அலுவலர் பாக்கியராஜ் முன்னிலையில், கோவில் ஊழியர்கள் பிரகாஷ், விமல் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 33 லட்சத்து 76 ஆயிரத்து 360 ரூபாய் பணம்; 71 கிராம் தங்கம்; 165 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன. தொடர்ந்து காணிக்கை பொருட்கள், வங்கி கணக்கில் செலுத்தப்பட்டன. மணலுார்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us